Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல், அதனைப் பகுதி என்றும் கூறலாம்.

(எ.கா) நட – என்ற சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகளே ஆகும்.

நடப்பான் – என்ற சொல்லை உறுப்பிலக்கண அடிப்படையில் பிரிக்க முடியும்.

நட +ப் + ப் + ஆன்



நட – பகுதி (பகாப்தம்) அதுவே வேர்ச்சொல். அந்த வேர்ச்சொல்லைக் கொண்டு உறுப்புகளை இணைத்துப் பகுபதம் ஆக்கலாம்.

(எ.டு) வீழ்ந்தார் – என்பதன் வேர்ச்சொல் யாது?

(அ) வீழ்ந்து (ஆ) வீழ்க (இ) வீழ் (ஈ) வீழின்

வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். அதில், ‘வீழ்’ என்பது தான் கட்டளையாக உள்ளது.

வேர்ச்சொல்: பகுதி விகுதிகளில் பகுதியாக அமைவதே வேர்ச்சொல்லாகும்.
நடந்தான் – நட
படித்தான் – படி
வைத்தான் – வை
போயினான் – போ
தின்றான் – தின்
பார்த்தான் – பார்
கேட்டான் – கேள்
வந்தான் – வா
மடிந்தான் – மடி
விட்டான் – விடு
உண்டான் – உண்
அஃகினான் – அஃகு
தேய்த்தான் – தேய்
சென்றான் – செல்
வாழ்ந்தான் – வாழ்

வேர்ச்சொல் என்பது கட்டளைப் பொருளில் அமைய வேண்டும். உங்களுக்கு முன்னிருப்பவரைப் பார்த்துச் சொல்வது போல் இருக்க வேண்டும். (எ.கா) ஓடு, விளையாடு, படி, மகிழ், தூங்கு, சிரி, எழு, செய்.

எச்சங்களாகவும் முற்றாகவும் உள்ள சொற்களை வினைப் பகுதியா மாற்றுதல்.

பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று எவ்வாறு மாற்றமடைகின்றன. என்பதைக் காண்போம்.

வென்றான் – வெல்
நோற்றான் – நோல்
விற்றான் – வில்
வேறல் – வெல்
சேறல் – செல்
கண்டான் – காண்
தொடங்குகிறது – தொடங்கு
சந்தித்தார் – சந்தி
நொந்தான் – நொ
செத்தான் – சா
இறந்தார் – இற
அரைந்தான் – அரை
எள்ளற்க – எள்
நீக்கிய – நீக்கு
உற்ற – உறு
கூவியபடி – கூவி
கொட்ட – கொட்டு
வருவார் – வா
சந்தித்தான் – சந்தி
கற்றவர் – கல்
கொண்டான் – கொள்
நகுதல் – நகு
நவின்றான் – நவில்
மொழிந்தாள் – மொழி
வெட்டினார் – வெட்டு
இட – இடு

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...