Skip to main content

வரலாற்றில் இன்று - 30.01.2022 - ஞாயிறு


2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது.



2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.  இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
2003 – பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.

2000 – கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.

1995 – அரிவாள்செல் சோகை நோய்க்கான சிகிச்சை வெற்றியளித்ததாக அமெரிக்க .தேசிய நல கழகம் அறிவித்தது.

1979 – அமெரிக்காவின் வாரிக் போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று டோக்கியோவில் இருந்து புறப்பட்டு 30 நிமிடத்தில் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது.

1976 – தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

1972 – பாக்கிஸ்த்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.

1972 – வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1964 – தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

1959 – ஆன்சு எட்டொஃப்ட் என்ற பிரித்தானியக் கப்பல் தனது முதலாவது பயணத்தில் பனிமலை ஒன்றுடன் மோதி மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.

1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றான்.

1948 – லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கிக் குண்டினால் தாக்கப்பட்டு பால்டிக் கடலில் மூழ்கியதில் 9,500 பேர் உயிரிழந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அம்போன் சமரில், சப்பானியப் படைகள் டச்சுக் கிழக்கிந்தியாவின் அம்போன் தீவைத் தாக்கி 300 கூட்டுப் படைகளின் போர்க்கைதிகளை கொன்றன.

1933 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1930 – குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது.

1908 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1889 – ஆத்திரியா-அங்கேரியின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1835 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.

1820 – எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார்.

1789 – தாய் சொன் படைகள் சிங் சீனருடன் சண்டையிட்டு தலைநகர் அனோயை விடுவித்தன.

1661 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக பொதுநலவாய இங்கிலாந்தின் காப்பளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் அவர் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் வைபவரீதியாகத் தூக்கிலிடப்பட்டது.

1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.

1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.

1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள்.

1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1]

1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின.

கிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.