Skip to main content

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி 

1559 : முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். 
 1759 : உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 
 1799 : இலங்கையில் அடிமைகள் கொண்டு வரப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது. 
 1822 : கொழும்பு, களனி ஆற்றிற்கு குறுக்கே மிதவைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. 
 1867 : லண்டன், ரீஜண்ட்ஸ் பூங்காவில் படகு ஏரியை மூடிய பனி இடிந்து விழுந்து 40 பேர் உயிரிழந்தனர். 
 1876 : ஆப்ரிக்காவின் முதல் செய்தித்தாள் டை ஆப்ரிகன்ஸ் பேட்ரியாட் வெளியிடப்பட்டது. 
 1889 : கோகோ கோலா கம்பெனி அட்லாண்டாவில் நிறுவப்பட்டது. 
 1892 : ஜேம்ஸ் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார். 
 1908 : யாழ்ப்பாணத்துக்கும் காரை நகருக்கும் இடையே பயணிகள் படகு சேவை ஆரம்பமானது. 
 1910 : அக்காலத்தின் மிக உயர்ந்த அணையான பஃபலோ பில் அணை கட்டப்பட்டது. 
 1911 : பாலஸ்தீன அரபு மொழி முதல் செய்தித்தாள் பாலாஸ்டின் வெளிவந்தது. 
 1919 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 21 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் இரு சோஷலிஸ்டுகள் ரோசா லக்சம்பர்க், கார்ல் லிப்னெக்ட் ஆகியோர் துணை ராணுவக் குழுவினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். 
 1934 : பீகாரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,700 பேர் வரை உயிரிழந்தனர். 
 1936 : முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டிடம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கட்டப்பட்டது. 
 1943 : அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர் :- ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர். 
 1944 : அர்ஜென்டினாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். 
 1949 : சீன உள்நாட்டு போர் :- கம்யூனிஸ்ட் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடமிருந்து கைப்பற்றின. 
 1966 : நைஜீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 
 1969 : சோவியத் ஒன்றியம் சோயுஸ் - 5 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. 
 1970 : நைஜீரிய உள்நாட்டுப் போர் :- நைஜீரியாவிடம் 32 மாத விடுதலைப் போரின் பின்னர் பியாஃப்ரான் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். முஹம்மர் அல்-கதாபி லிபியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 1973 : வியட்நாம் போர் :- அமைதிப் பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடை நிறுத்தினார். 
 1975 : போர்ச்சுகல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது. 
 1977 : ஸ்வீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 
 2001 : விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. 
 2005 : செல்போன்களில் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்பும் மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 2007 : சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராஹிம் மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 
 2013 : சிரியாவின் அலெப்போ பல்கலைக்கழகம் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 
 2016 : சோமாலியாவில் அல்- ஷபாப் இஸ்லாமியப் போராளிகளுடனான போரில் கென்யா ராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர். 
 2019 : கென்யா, நைரோபியில் சோமாலியப் போராளிகள் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர். 19 பேர் காயமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது. யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர். ஐரோ...