Skip to main content

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி

வரலாற்றில் இன்று 15/01/2022-சனி 

1559 : முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். 
 1759 : உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 
 1799 : இலங்கையில் அடிமைகள் கொண்டு வரப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது. 
 1822 : கொழும்பு, களனி ஆற்றிற்கு குறுக்கே மிதவைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. 
 1867 : லண்டன், ரீஜண்ட்ஸ் பூங்காவில் படகு ஏரியை மூடிய பனி இடிந்து விழுந்து 40 பேர் உயிரிழந்தனர். 
 1876 : ஆப்ரிக்காவின் முதல் செய்தித்தாள் டை ஆப்ரிகன்ஸ் பேட்ரியாட் வெளியிடப்பட்டது. 
 1889 : கோகோ கோலா கம்பெனி அட்லாண்டாவில் நிறுவப்பட்டது. 
 1892 : ஜேம்ஸ் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார். 
 1908 : யாழ்ப்பாணத்துக்கும் காரை நகருக்கும் இடையே பயணிகள் படகு சேவை ஆரம்பமானது. 
 1910 : அக்காலத்தின் மிக உயர்ந்த அணையான பஃபலோ பில் அணை கட்டப்பட்டது. 
 1911 : பாலஸ்தீன அரபு மொழி முதல் செய்தித்தாள் பாலாஸ்டின் வெளிவந்தது. 
 1919 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 21 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் இரு சோஷலிஸ்டுகள் ரோசா லக்சம்பர்க், கார்ல் லிப்னெக்ட் ஆகியோர் துணை ராணுவக் குழுவினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். 
 1934 : பீகாரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,700 பேர் வரை உயிரிழந்தனர். 
 1936 : முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டிடம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கட்டப்பட்டது. 
 1943 : அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர் :- ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர். 
 1944 : அர்ஜென்டினாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். 
 1949 : சீன உள்நாட்டு போர் :- கம்யூனிஸ்ட் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடமிருந்து கைப்பற்றின. 
 1966 : நைஜீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 
 1969 : சோவியத் ஒன்றியம் சோயுஸ் - 5 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. 
 1970 : நைஜீரிய உள்நாட்டுப் போர் :- நைஜீரியாவிடம் 32 மாத விடுதலைப் போரின் பின்னர் பியாஃப்ரான் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். முஹம்மர் அல்-கதாபி லிபியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 1973 : வியட்நாம் போர் :- அமைதிப் பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடை நிறுத்தினார். 
 1975 : போர்ச்சுகல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது. 
 1977 : ஸ்வீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 
 2001 : விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. 
 2005 : செல்போன்களில் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்பும் மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 2007 : சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராஹிம் மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 
 2013 : சிரியாவின் அலெப்போ பல்கலைக்கழகம் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். 
 2016 : சோமாலியாவில் அல்- ஷபாப் இஸ்லாமியப் போராளிகளுடனான போரில் கென்யா ராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர். 
 2019 : கென்யா, நைரோபியில் சோமாலியப் போராளிகள் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர். 19 பேர் காயமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.