வரலாற்றில் இன்று
15/01/2022-சனி
1559 : முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக
முடிசூடினார்.
1759 : உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
1822 : கொழும்பு, களனி ஆற்றிற்கு குறுக்கே மிதவைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1867 : லண்டன், ரீஜண்ட்ஸ் பூங்காவில் படகு ஏரியை மூடிய பனி இடிந்து விழுந்து 40 பேர் உயிரிழந்தனர்.
1876 : ஆப்ரிக்காவின் முதல் செய்தித்தாள் டை ஆப்ரிகன்ஸ் பேட்ரியாட் வெளியிடப்பட்டது.
1889 : கோகோ கோலா கம்பெனி அட்லாண்டாவில்
நிறுவப்பட்டது.
1892 : ஜேம்ஸ் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு
விதிகளை உருவாக்கினார்.
1908 : யாழ்ப்பாணத்துக்கும் காரை நகருக்கும் இடையே
பயணிகள் படகு சேவை ஆரம்பமானது.
1910 : அக்காலத்தின் மிக உயர்ந்த அணையான பஃபலோ பில் அணை கட்டப்பட்டது.
1911 : பாலஸ்தீன அரபு மொழி முதல் செய்தித்தாள் பாலாஸ்டின் வெளிவந்தது.
1919 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 21 பேர் உயிரிழந்தனர்.
ஜெர்மனியின் இரு சோஷலிஸ்டுகள் ரோசா லக்சம்பர்க், கார்ல் லிப்னெக்ட் ஆகியோர் துணை ராணுவக் குழுவினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
1934 : பீகாரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,700 பேர் வரை உயிரிழந்தனர்.
1936 : முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டிடம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் கட்டப்பட்டது.
1943 : அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் நிறுவப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் :- ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர்.
1944 : அர்ஜென்டினாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.
1949 : சீன உள்நாட்டு போர் :- கம்யூனிஸ்ட் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடமிருந்து கைப்பற்றின.
1966 : நைஜீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
1969 : சோவியத் ஒன்றியம் சோயுஸ் - 5 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
1970 : நைஜீரிய உள்நாட்டுப் போர் :- நைஜீரியாவிடம் 32 மாத விடுதலைப் போரின் பின்னர் பியாஃப்ரான் கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்.
முஹம்மர் அல்-கதாபி லிபியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1973 : வியட்நாம் போர் :- அமைதிப் பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடை நிறுத்தினார்.
1975 : போர்ச்சுகல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
1977 : ஸ்வீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
2001 : விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
2005 : செல்போன்களில் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்பும் மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 : சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராஹிம் மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
2013 : சிரியாவின் அலெப்போ பல்கலைக்கழகம் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
எகிப்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர்.
2016 : சோமாலியாவில் அல்- ஷபாப் இஸ்லாமியப் போராளிகளுடனான போரில் கென்யா ராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர்.
2019 : கென்யா, நைரோபியில் சோமாலியப் போராளிகள் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர்.
19 பேர் காயமடைந்தனர்.
Comments