Skip to main content

வரலாற்றில் இன்று 16/01/2022- SUNDAY

 கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.

929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது.

1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின்

கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது.

1492 – எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம் அளிக்கப்பட்டது.

1547 – இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264-ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது.

1556 – இரண்டாம் பிலிப்பு எசுப்பானியாவின் அரசராக முடிசூடினார்.

1572 – இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையை மீளக் கொண்டுவருவதற்கு சதியில் ஈடுபட்டமைக்காக நோர்போக் கோமகன் தொதாம்சு ஓவார்டு மீது விசாரணை ஆரம்பமானது.

1707 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

1757 – நரேலா சமரில் மராட்டியப் பேரரசுப் படைகள் 5-000 படைகளைக் கொண்ட துராணிப் பேரரசைத் தோற்கடித்தது.[1]

1761 – பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

1777 – வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1862 – இங்கிலாந்து, நோர்தம்பலாந்து என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர்.

1900 – சமோவா தீவுகளுக்கான உரிமையை விட்டுக் கொடுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் 1899 ஆங்கிலோ-செருமன் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.

1909 – ஏர்னஸ்ட் சாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

1920 – உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது கூட்டம் பாரிசில் நடைபெற்றது.

1942 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் நடிகை கரோல் லம்பார்டு உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

1945 – இட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.

1969 – செக்கோசிலோவாக்கியாவில் சோவியத் இராணுவம் முதல் வருடத்தில் மாணவர் எழுச்சியை அடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யான் பலாக்கு என்ற செக் மாணவர் பிராகாவில் தீக்குளித்து மாண்டார்.

1969 – சோவியத் விண்கலங்கள் சோயுசு 4, சோயுசு 5 விண்கலங்கள் முதல் தடவையாக புவியின் சுற்றுப்பாதையில் விண்வெளிவீரர்களைப் பரிமாறிக் கொண்டன.

1979 – ஈரான் கடைசி மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

1991 – ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.

1992 – எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

2001 – கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

2006 – எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் அரசுத்தலைவரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

2008 – 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

2008 – இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

2016 – புர்க்கினா பாசோவில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.