Skip to main content

வரலாற்றில் இன்று - 01.03.2022 - செவ்வாய்

நிகழ்வுகள்


2007 – ஐக்கிய அமெரிக்காவின் தெற்கே சுழல் காற்று தாக்கியதில் 20 பேர் வரை உயிரிழந்தனர்.

2006 – ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

2003 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை டென் ஹாக்கில் நடத்தியது.

1995 – யாகூ! [yahoo]ஆரம்பிக்கப்பட்டது.

1992 – பொசுனியா எர்செகோவினா யூகொஸ்லாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.1991 – சதாம் உசைனுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஈராக்கில் ஆரம்பமாயின.

1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1980 – சனி கோளின் யானுசு என்ற சந்திரன் இருப்பதை வொயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.

1977 – சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1973 – சூடானில் சவுதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.

1971 – பாக்கித்தான் அரசுத்தலைவர் யாகியா கான் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களைக் காலவரையறையின்றி ஒத்திவைத்தார். கிழக்குப் பாக்கித்தானில் பெரும் மக்கள் கலவரம் வெடித்தது.

1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1961 – உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன.

1956 – கிழக்கு செருமனியின் தேசிய மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.

1956 – பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் ஒலியன்களின் அகரவரிசைக்கான நகல் வடிவை பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்புக்காகத் தயாரித்தது.

1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

1954 – அணுகுண்டு சோதனை: காசில் பிராவோ என்ற ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் வெடிக்கவைக்கப்பட்டதில் கதிரியக்க மாசு அமெரிக்காவில் ஏற்பட்டது.

1953 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.

1949 – இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது.

1948 – இலங்கையின் தெற்கே ஹோமகமைக்கும் கொட்டாவைக்கும் இடையே இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 52 பேர் படுகாயமடைந்தனர்.

1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தது.

1939 – சப்பான் ஒசாக்காவில் இராணுவ வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

1936 – ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1921 – வாரிக் ஆம்சுட்ரோங் தலைமையிலான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஷசுத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் முதல்தடவையாக வென்றது. இது போன்ற சாதனையை ஆத்திரேலியா 86 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் சாதித்தது.

1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.

1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.

1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு நடைமுறைக்கு வந்தது.

1896 – என்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1896 – எத்தியோப்பிய இராணுவத்தினர் இத்தாலியப் படைகளைத் தோற்கடித்தனர். முதலாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் முடிவுக்கு வந்தது.

1893 – நிக்கோலா தெஸ்லா வானொலி பற்றிய தனது முதலாவது பொதுமக்களுக்கான அறிமுகத்தை அமெரிக்காவின் செயின்ட் லூயிசு நகரில் நடத்தினார்.

1873 – முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.

1872 – அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா உலகின் முதலாவது தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது.

1869 – திமீத்ரி மெண்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை நிறைவேற்றி வெளியிட அனுப்பினார்.

1867 – நெப்ராஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 37ஆவது மாநிலமானது.

1845 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் டைலர் டெக்சசுக் குடியரசை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.

1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு திரும்பினான்.

1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.

1796 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி பத்தாவியக் குடியரசினால் தேசியமயமாக்கப்பட்டது.

1790 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1628 – இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார்.

1565 – இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது.

1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.

பிறப்புகள்

1990 – கந்தீல் பலோச்சு, பாக்கித்தானிய நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. 2016)

1980 – சாகித் அஃபிரிடி, பாக்கித்தான் துடுப்பாளர்

1978 – ஜென்சென் அக்லஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1954 – ரான் ஹவர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1953 – பந்துல வர்ணபுர, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

1953 – மு. க. ஸ்டாலின், தமிழக அரசியல்வாதி, தி.மு.க. செயல் தலைவர்

1944 – புத்ததேவ் பட்டாசார்யா, மேற்கு வங்கத்தின் 7வது முதலமைச்சர்

1943 – இரசீத் சூன்யாயெவ், உருசிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர்

1922 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1995)

1921 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1998)

1920 – சைமன் பிமேந்தா, இந்தியக் கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (இ. 2013)

1917 – கே. பி. சிவானந்தம், தமிழக வீணைக் கலைஞர் (இ. 2003)

1911 – எட்வின் ஏ. பீல், பிரித்தானியக் கல்வி உளவியலாளர் (இ. 1992)

1910 – எம். கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1959)

1904 – ஆ. நா. சிவராமன், தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2001)

1870 – யூகி மைக்கேல் அந்தொனியாடி, கிரேக்க-பிரான்சிய வானியலாளர் (இ. 1944)

1810 – பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)

1647 – ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693)

இறப்புகள்

2019 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (பி. 1930)

2017 – தாரக் மேத்தா, இந்திய நகைச்சுவை எழுத்தாளர், நாடகாசிரியர் (பி. 1929)

2015 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)

2014 – பங்காரு லட்சுமண், இந்திய அரசியல்வாதி (பி. 1939)

2003 – மேஜர் சுந்தரராஜன், தமிழக திரைப்பட, மேடை நடிகர் (பி. 1935)

2001 – ஆ. நா. சிவராமன், தமிழகப் பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1904)

1992 – கே. பி. ஜானகி அம்மாள், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், மேடை நாடகக் கலைஞர் (பி. 1917)

1992 – சூலமங்கலம் ராஜலட்சுமி, கருநாடக-பக்திப் பாடகி (பி. 1940)

1986 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (பி. 1911)

1943 – அலெக்சாண்டர் எர்சின், சுவிட்சர்லாந்து-பிரான்சிய மருத்துவர், நுண்ணியலாளர் (பி. 1863)

1940 – அ. தா. பன்னீர்செல்வம், சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் (பி. 1888)

1914 – நான்காம் மிண்டோ பிரபு, கனடாவின் 8-வது ஆளுநர் (பி. 1845)

1911 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு-செருமானிய வேதியியலாளர் (பி. 1852)

1320 – புயந்து கான், சீனப் பேரரசர் (பி. 1286)

You can also join in our Whatsapp & Telegram group to get daily updates.

 

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.