Skip to main content

வரலாற்றில் இன்று - 03.02.2022 - வியாழன்


2014 – மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
2007 – பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர்.


2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1998 – இத்தாலியில் தாழப் பறந்த விமானம் ஒன்று கம்பிவட ஊர்தியொன்றின் கம்பிகளை அறுத்ததில், 20 பேர் உயிரிழந்தனர்.
1989 – பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெசுனர் பதவியிழந்தார்.
1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
1984 – அமெரிக்காவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்ணில் இருந்து மற்றொருவருக்கு கருமாற்றம் வெற்றிகரமாக நிறைவேற்ரப்பட்டது.
1972 – ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியது. அடுத்த ஏழு நாட்களில் 4,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1969 – யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.
1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: மணிலா நகரை சப்பானிடம் இருந்து கைப்பற்ற அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ஒரு மாதம் நீடித்த போரைத் தொடங்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க இராணுவ, கடற்படைகள் சப்பானிடம் இருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.
1943 – டோர்செசுடர் என்ற அமெரிக்கக் கப்பல் செருமனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில், 902 பேரில் 230 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
1931 – நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் உயிரிழந்தனர்.
1930 – பிரித்தானிய ஆங்காங்கின் கவுலூனில் இடம்பெற்ற மாநாட்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.
1913 – ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.
1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1876 – பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
1830 – கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது.
1807 – பிரித்தானியப் படை சர் சாமுவேல் ஓசுமுட்டி தலைமையில் மொண்டேவீடியோவைக் (இன்றைய உருகுவேயின் தலைநகர்) கைப்பற்றியது.
1783 – ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படை இடச்சின் கட்டுப்பாட்டில் இருந்த சின்டு யுசுடாசியசு என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றியது.
1706 – புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி வளைப்பு உத்தியைப் பயன்படுத்தி வென்றது.
1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1661 – மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.
1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.
1488 – போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார்.
1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...