Skip to main content

வரலாற்றில் இன்று - 06.02.2022 - ஞாயிறு

2016 – தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.
2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.1989 – போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.
1978 – அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.
1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1959 – டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
1958 – செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.
1952 – ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.
1951 – அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.
1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.
1899 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1863 – இலங்காபிமானி (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1851 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர்.
1840 – நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
1820 – முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர்.
1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
1806 – கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1792 – மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.
1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது.
1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.
60 – கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...