Skip to main content

வரலாற்றில் இன்று - 08.02.2022 - செவ்வாய்

2014 – மதீனாவில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 15 எகிப்தியர்கள் உயிரிழந்தனர், 130 பேர் காயமடைந்தனர்.
2010 – ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைகளில் இடம்பெற்ற தொடர் பனிச்சரிவுகளில் சிக்கி 172 பேர் உயிரிழந்தனர்.


2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
2005 – இசுரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் இறந்தனர்.1986 – கனடாவின் இண்டன் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
1983 – ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைப் பெரும் புழுதிப் புயல் தாக்கியதில், 320 மீட்டர் புழுதி மேகம் நகரில் தோன்றியது.
1981 – கிரேக்கத்தில் 21 கால்பந்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 21 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 55 பேர் காயமடைந்தனர்.
1974 – மேல் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1974 – 84 நாட்கள் விண்ணில் பயணம் செய்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
1965 – அமெரிக்காவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்சு விமானம் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 84 பேரும் உயிரிழந்தனர்.
1963 – ஈராக்கில் அப்து அல்-கரீம் காசிம் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
1963 – அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, மற்றும் கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியன சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.
1960 – இரண்டாம் எலிசபெத் மகாராணி விடுத்த அறிவிப்பு ஒன்றில், அவரும் அவரது குடும்பமும் வின்சர் மாளிகை என அழைக்கப்படுவர் எனவும், அவரது வழித்தோன்றல்கள் மவுன்ட்பேட்டன்-வின்சர் என அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
1955 – பாக்கித்தானின் சிந்து மாகாண அரசு நில மானிய முறைமையை ஒழித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவும் கனடாவும் ரைன் ஆற்றின் மேற்குக் கரையைக் கைப்பற்றும் நோக்குடன் வெரிடபிள் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1942 – செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி செருமனியில் இருந்து தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: டச்சு இராணுவத்தினர் இந்தோனேசியாவின் பஞ்சார்மாசின் நகரை சப்பானியர் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகரை தீயிட்டுக் கொளுத்தினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சிங்கப்பூரை ஊடுருவியது.
1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1904 – சப்பானியரின் நீர்மூழ்கிக் குண்டு ஒன்று சீனாவின் லூசென்கோ நகரைத் தாக்கியது. உருசிய-சப்பானியப் போர் ஆரம்பமானது.
1904 – அச்சே போர்: டச்சு குடியேற்ற இராணுவம் வடக்கு சுமாத்திராவின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையை ஆரம்பித்தது. இது அங்கு இனப்படுகொலையில் முடிந்தது.
1885 – முதலாவது அரச-ஆதரவுடனான சப்பானியக் குடியேற்றம் அவாயில் ஆரம்பமானது.
1879 – சிட்னி துடுப்பாட்ட ஆட்டம் ஒன்றில் இடம்பெற்ற கலவரம் ஒன்றில் ஜார்ஜ் ஹரீஸ் தலைமையிலான இங்கிலாந்து துடுப்பாட்ட அணி கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டது.
1817 – லாசு எராசு தனது படையுடன் அந்தீசு மலையைக் கடந்து சான் மார்ட்டினுடன் இணைந்து சிலியை எசுப்பானியாவிடம் இருந்து விடுவித்தார்.
1785 – வாரன் ஏசுடிங்சு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிரித்தானிய இந்தியத் தலைமை ஆளுநர் பதவியைத் துறந்தார்.
1601 – முதலாம் எலிசபெத் மகாராணிக்கு எதிராக எசெக்சின் இரண்டாம் பிரபு இராபர்ட் டெவெரோ கிளர்ச்சியில் ஈடுபட்டார். இது விரைந்து அடக்கப்பட்டது.
1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
1347 – பைசாந்திய உள்நாட்டுப் போர் 1341–47 முடிவுக்கு வந்தது.
1238 – மங்கோலியர்கள் உருசிய நகரான விளாதிமிரை தீயிட்டுக் கொளுத்தினர்.
421 – மேற்கு உரோமைப் பேரரசின் இணைப் பேரரசராக மூன்றாம் கொன்ஸ்டான்டியசு பதவியேற்றார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது. யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர். ஐரோ...