Skip to main content

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர்.
2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.


1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.
1971 – அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.
1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1951 – கொரியப் போர்: இரண்டு-நாள் கியோச்சாங் படுகொலைகள் ஆரம்பமாயின. தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஆண்டு முழுவதுமான பகலொளி சேமிப்பு நேரம் போர்க்கால நடவடிக்கையாக ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
1913 – எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.
1904 – உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது.
1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1897 – பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரசு ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.
1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1555 – இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
474 – சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - காப்பியங்கள்

காப்பியங்கள் காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம். காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர் வளையாபதி -பெயர் தெரியவில்லை குண்டலகேசி – நாதகுத்தனார் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள் மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும். குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்) 1. சிலப்பதிகாரம் நூற் குறிப்பு: சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் வி...