Skip to main content

வரலாற்றில் இன்று - 21.02.2022 - திங்கள்

நிகழ்வுகள்


2013 – 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1995 – இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.

1974 – சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.

1973 – சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.

1972 – சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.

1965 – மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1960 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.

1952 – வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.

1952 – வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.

1947 – எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலிய\[ படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, சப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.

1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.

1921 – ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

1919 – செருமனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.

1907 – நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.

1885 – வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.

1878 – முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.

1848 – கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.

1842 – தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.

1808 – உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.

1804 – நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.

1803 – கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.

1613 – முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.

1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.

1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது.

1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார்.

பிறப்புகள்

1988 – வேதிகா குமார், தென்னிந்திய நடிகை

1987 – எலன் பேஜ், கனடிய நடிகை

1980 – ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக், பூட்டான் மன்னர்

1970 – கருணாஸ், தமிழக நடிகர், அரசியல்வாதி

1964 – ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர்

1958 – கிம் கோட்ஸ், கனடிய நடிகர்

1946 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (இ. 2016)

1924 – இராபர்ட் முகாபே, சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவர் (இ. 2019)

1921 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002)

1910 – டக்ளஸ் பேடர், ஆங்கிலேய விமானி (இ. 1982)

1896 – நிராலா, இந்தியக் கவிஞர் (இ. 1961)

1894 – சாந்தி சுவரூப் பட்நாகர், இந்திய வேதியியலாளர் (இ. 1955)

1878 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973)

1801 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890)

1728 – மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762)

இறப்புகள்

2011 – திருச்சி பிரேமானந்தா, சர்ச்சைக்குரிய இந்திய மதகுரு (பி. 1951)

2001 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (பி. 1916)

2001 – நரேன் சந்து பரசார், இந்திய மொழியியலாளர் (பி. 1934)

1984 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905)

1981 – ஏ. எஸ். ராஜா, இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்

1965 – மல்கம் எக்ஸ், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925)

1938 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)

1926 – ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ், நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி. 1853)

1906 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855)

1829 – ராணி சென்னம்மா, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778)


Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 09.02.2022 - புதன்

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. 2016 – செருமனி, பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர். 2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 20.02.2022 - ஞாயிறு

நிகழ்வுகள் 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர். 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.