திருக்குறள்
இலக்கியம் பாடத்தொகுப்பு:திருக்குறள் – திரு + குறள்
சிறப்புப் பெயர்கள்:
- இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
- திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
- திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
- திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
- திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
- உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நூற்றெழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
- மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
சிறப்புப் பெயர்கள்:
- உலகப் பொதுமறை
- முப்பால்
- வாயுறை வாழ்த்து
- பொதுமறை
- பொய்யாமொழி
- தெய்வநூல்
- தமிழ்மறை
- முதுமொழி
- உத்தரவேதம்
- திருவள்ளுவம்
- திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
- திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
- அறத்துப்பாலில் – 38 அதிகாரங்கள், பொருட்பாலில் – 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் – 25 அதிகாரங்கள் உள்ளன.
- விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
- திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
- திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமா முனிவர். ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
திருவள்ளுவர்:
- திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
- இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.
- திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
- கிறிஸ்து ஆண்டு (கி.பி.) 31 – திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2013 31 – 2043 (கி.பி. 2013ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)
- திருக்குறளின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி.யு.போப் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தனர்.
- இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- திருவள்ளுவமாலை என்னும் நூல் இதன் பெருமைக்கும்ää சிறப்புக்கம் சான்றாக திகழ்கிறது.
- உருசிய நாட்டில் அணு துளைக்காத கிhரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
- மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
- திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
- திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
- ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
- அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை ஏழு.
- மொத்த குறட்பாக்கள் இதன் கூட்டுத் தொகையும் ஏழு.
திருவள்ளுவமாலை:
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – கபிலர்
- காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும்ää சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.
- திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
- இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
- ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
- திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”.கபிலர்
பத்தொன்பது அதிகாரங்கள்
- அன்புடைமை
- பண்புடைமை
- கல்வி
- கேள்வி
- அறிவு
- அடக்கம்
- ஒழுக்கம்
- பொறையுடைமை
- நட்பு
- வாய்மை
- காலம்
- வலி
- ஒப்புரவறிதல்
- செய்ந்நன்றி அறிதல்
- சான்றாமை
- பெரியரைத் துணைக்கோடல்
- பொருள் செயல்வகை
- வினைத்திட்பம்
- இனியவை கூறல்
Comments