Skip to main content

பொதுத் தமிழ் - Tnpsc General Tamil New Syllabus 2022 - தமிழ் இலக்கியம் - கம்பராமாயணம்

 கம்பராமாயணம்

  • இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது
  • கம்பராமாணயம் ஒரு வழி நூல்
  • வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல்
  • கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல்
  • இயற்றியவர் கம்பர்
  • குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
  • பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர்
  • கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை
  • கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
  • கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
  • கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்

கம்பராமாயணம் நூல் அமைப்பு

  • காண்டம் – 6,
  • படலம் – 113,
  • பாடல்கள் – 10569

காண்டம்

  1. பாலகாண்டம்
  2. அயோத்தியா காண்டம்
  3. ஆரண்ய காண்டம்
  4. கிஷ்கிந்தா காண்டம்
  5. சுந்தர காண்டம்
  6. யுத்த காண்டம்
  • முதற்படலம், ஆற்றுப்படலம் இறுதிப்படலம் விடை கொடுத்த படலம்
  • தமிழின் மிகப் பெரிய நூல் கம்பராமாயணம்
  • காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சி கம்பராமாயணம்
  • திருமாலின் அவதாரம் இராமன்
  • இராமனின் குலம் சூரிய குலம்
  • தந்தை தசரதன், தாய் கோசலை (கௌசல்யா)
  • வளர்ப்புத்தாய் கைகேயி
  • நாடு கோசலம்
  • நகரம் அயோத்தி
  • ஆசிரியர் வசிட்டர்
  • கைகேயியின் தோழி கூனி
  • கூனியின் இயற்பெயர் மந்தரை
  • கைகேயியின் மனத்தை மாற்றியவள் கூனி

இராமனின் தம்பியர் மூவர்

  1. பரதன்
  2. இலக்குவன்
  3. சத்ருக்கனன்

இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்

  1. குகன்
  2. சுக்ரீவன்
  3. வீடணன்
  • இராமன் முதன் முதலாகக் கொன்றது தாடகை என்ற பெண்ணை.
  • விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கும் பொருட்டு இராமன் தாடகையைக் கொன்றான்.
  • இராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் விசுவாமித்திரர்.
  • இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் மிதிலை
  • சீதையின் தந்தை ஜனகன்
  • சீதைக்கு ஜானகி, மைதிலி என்ற வேறுபெயர்களும் உண்டு.
  • பரதன் மனைவி மாண்டலி
  • இலக்குவன் மனைவி ஊர்மிளா (ஜனகன் மகள்)
  • சத்ருக்னன் மனைவி சதகீர்த்தி (ஜனகன் மகள்)
  • இராவணன் மனைவி மண்டோதரி
  • கும்பகருணன் மனைவி வச்சிரசுவாலை, தீர்க்க சுவாலை
  • வீடணன் மனைவி சுரமை
  • கைகேயியின் மகன் பரதன்
  • சுமத்திரையின் மக்கள் இலக்குவன்,சத்ருக்கனன்
  • ஆதிசேடனின் அவதாரம் இலக்குவன்
  • திருமணம் முடிந்து அயோத்தி வரும் வழியில் இராமனை எதிர்த்தவர் பரசுராமர்
  • கங்கைக் கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவன் குகன்.
  • குகனின் தலைநகரம் சிருங்கிபேரம்
  • கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி
  • வாலி மனைவி தாரை
  • வாலி மகன் அங்கதன்
  • வாலி தம்பி சுக்ரீவன்
  • வாலியைக் கொன்றவன் இராமன்
  • சுக்ரீவன் அமைச்சன் அனுமான்
  • இராமனுக்காகச் சீதையிடம் தூது சென்றவன் அனுமான்.
  • இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
  • அங்கதன் தூது வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
  • இரண்யவதம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை
  • வீடணன் மகள் திரிசடை
  • இராவணன் மகன் இந்திரஜித்
  • இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்
  • இந்திரஜித்தின் அம்பால் மயங்கி விழுந்தவன் இலக்குவன்.
  • இந்திரஜித்தைக் கொன்றவன் இலக்குவன்
  • 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை இலக்குவன் கொன்றான்.
  • தேவ – அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
  • இராமாயணப் போர் 18 மாதம் நடந்தது.
  • மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.
  • செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.
  • இராமன் முடிசூட்டிக் கொண்ட போது அரியணை தாங்கியவன் அனுமான்.
  • உடைவாள் ஏந்தியவன் அங்கதன்
  • வெண்கொற்றைக் குடை பிடித்தவன் பரதன்
  • கவரி வீசியவர்கள் இலக்குவன் சத்ருக்கனன்
  • முடிஎடுத்துக் கொடுத்தவர் சடையப்ப வள்ளலின் முன்னோர் முடிசூட்டியவன் வசிட்டன்
  • கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்.

கம்பர் எழுதிய பிற நூல்கள்

  1. ஏர் எழுபது
  2. திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
  3. சடகோபர் அந்தாதி
  4. சரசுவதி அந்தாதி
  5. கம்பர் மகன் அம்பிகாபதி
  • அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
  • இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்

புகழுரைகள்

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

“கம்பனைப் போல வள்ளுவனைப் போல்

இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதி

Comments

Popular posts from this blog

வரலாற்றில் இன்று - 28.01.2022 - வெள்ளி

2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர். 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று - 02.03.2022 - புதன்

நிகழ்வுகள் 2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன. 2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர். 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

யுக்ரேனில் இன்றைய நடவடிக்கை

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. யுக்ரேனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேசியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் மரியூபோல் நகரில் ரஷ்யா நடத்திய இடைவிடாத தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று பிபிசியின் அமெரிக்க செய்தி சேகரிப்பு இணை நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அரசு அவசரகால சேவை கூறுகிறது. யுக்ரேனின் கெர்சன் நகரில் சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்நகர மேயர். ஐரோ...